40 நாளில் 7 முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த அதிசய இளைஞர்!

40 நாளில் 7 முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த அதிசய இளைஞர்!

இந்தியாவில்  40 நாளில் 7 முறை பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் உயிர்பிழைத்த இளைஞன் ஒருவர் தொடர்பில் ஆச்சர்யப்படவைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இந்தியா - உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 24 வயதுடைய விகாஷ் தூபே என்ற இளைஞர் கடந்த 40 நாட்களுக்குள் ஏழு முறை பாம்பு கடிக்கு உள்ளாகியுள்ளார்.

40 நாளில் 7 முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த அதிசய இளைஞர்! | Survived Snake Bites 7 Times In 40 Days

எனினும் அவர் , மருத்துவர்களின் உதவியுடன் உயிர் பிழைத்துள்ளார். பாம்பு கடியில் இருந்து தப்பிக்க தான் உறவினர் வீட்டுக்குச் சென்று தங்கினாலும் பாம்பு தன்னை தேடி வந்து கடிப்பதாக இளைஞன் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மாத்திரமே பாம்பு தன்னை கடிப்பதாக இளைஞன் தெரிவித்துள்ளமை பல்லருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது..