இலங்கையில் 100 வயதை கடந்த 450 பேர்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கையில் 100 வயதை கடந்த 450 பேர்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கையில் (Srilanka) 100 வயதை கடந்த 450 பேர் வசிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த தகவலை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siambalapitiya) தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கான விசேட அரச கொடுப்பனவுக்குத் தகுதி பெற்றிருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட அரச கொடுப்பனவு

மேலும் நாட்டில் 2.7 மில்லியன் பேர் 60 வயதைக் கடந்தவர்களாக இருப்பதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை மக்கள் தொகை பிரச்சினை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் திகதி உலக மக்கள் தொகை தினமாக (World Population Day) கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் தொகை தினம்

அவ்வகையில் 35 ஆவது மக்கள்தொகை தினம் இன்று (11.7.2024) கடைப்பிடிக்கப்படுகிறது. 

சிக்கல்களைப் புரிந்துகொள்வதற்கும், தீர்வுகளை கொண்டு வருவதற்கும், நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் தரவுகளை சேகரிப்பதில் அக்கறை காட்டவேண்டியது அவசியம் என இந்த ஆண்டின் கருப்பொருள் உணர்த்துகிறது.