கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்கள்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரங்கள்

நாட்டில் நேற்றைய தினம் 4 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் துருக்கியில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 3 பேர் இதில் அடங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் லங்காபுர பிரதேச செயலகத்தின் பணிக்குழாமின் ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுதியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 2814 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 16 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வைத்தியாசலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 333 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் 470 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.