ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்கள்

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தை முன்னிட்டு முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்கள்

கொவிட்19 வைரஸின் தாக்கம் மற்றும் நாட்டின் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் முக்கிய சில வழிகாட்டல்களைப் பேணிநடந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கோரியுள்ளது.

இது தொடர்பில் உலமா சபை உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.எம். முர்ஷித் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

துல்ஹிஜ்ஜஹ் மாதமுதல் பத்து நாட்களும் மிகசிறப்புப் பொருந்திய நாட்கள் என்பதால் எஞ்சியுள்ள நாட்களில் நல்லமல் செய்ய அனைவரும்ஆர்வங்காட்டுவதுடன், அதன் ஒன்பதாவது நாளில் அரபாவுடைய நோன்பை நோற்க ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.

உலகளாவிய ரீதியில் கொவிட்19 வைரஸின் தாக்கம் தொடர்ந்தும் இருப்பதனால், சுகாதார அமைச்சினால் வழங்கப்படுகின்ற அனைத்து வழிகாட்டல்களையும் உரியமுறையில் பேணி நடந்துக் கொள்வதுடன், பெருநாள் தொழுகையின் போது சமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசம் அணிதல், வீட்டிலிருந்தே வுழூசெய்துக் கொண்டு வருதல் போன்றவிடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

சமூக இடைவெளிப் பேணி பெருநாள் தொழுகை நடாத்தப்பட வேண்டும் என்பதால், ஆண், பெண் அனைவரும் ஓர் இடத்தில், மார்க்கவரையறைகளைப் பேணிய நிலையில், PHI உடைய அனுமதியுடன் தொழுகைக்காக ஒன்று சேர்வது பொருத்தமா? என்பதை மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் உலமாக்கள் கலந்தாலோசித்து தமது பிரதேசத்திற்கு பொருத்தமான வழிமுறையைச் செயற்படுத்த வேண்டும்.

நோயாளிகள் மற்றும் சிறுவர்கள் பெருநாள் தொழுகை நடாத்தப்படும் இடத்திற்கு வருகைத் தருவதைத் தவிர்ந்துக் கொள்ள வேண்டும். துல்ஹிஜ்ஜஹ் மாதம்பிறை ஒன்பது ஸுப்ஹுத் தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் உடைய மூன்றாவது நாள்பிறை13 (செவ்வாய்கிழமை) அஸ்ர் வரைதக்பீர் சொல்வது சுன்னத்தாகும்.

இத்தினங்களில் முஸாபஹா, முஆனகா போன்ற செயல்களை தவிர்ந்து ஸலாம் கூறுவதுடன் போதுமாக்கிக் கொள்ள வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளது.