தபால் மூல வாக்களிப்பில் 687,629 பேர் பங்கேற்பு

தபால் மூல வாக்களிப்பில் 687,629 பேர் பங்கேற்பு

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொவிட் 19 தொற்று நோயாளர்களுடன் தொடர்புகளை பேணியமை தொடர்பில் மூடப்பட்டிருந்த இராயாங்கனை பிரதேசத்தின் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த பிரதேசத்தில் 502 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில் 472 பேர் தமது வாக்குகளை பயன்படுத்தியிருப்பதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 700,505 பேர் தகுதி பெற்றிருந்தனர். இவர்களுள் 687,629 பேர் தமது வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர்.