போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: விசாரணையில் சிக்கிய கடற்படை அதிகாரிகள்

போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: விசாரணையில் சிக்கிய கடற்படை அதிகாரிகள்

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் இரண்டு  இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் குறித்த இருவரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விரிவான உள்ளக விசாரணையைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மோசடிக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரண்டு கடற்படை வீரர்களும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.