பேய் வீட்டில் சிறுவன் மீது தாக்குதல்

பேய் வீட்டில் சிறுவன் மீது தாக்குதல்

 களுத்துறையில் பொசன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு சிறுவர்களால் வடிவமைக்கப்பட்ட பேய் வீடொன்றிற்கு சென்ற மூவர், அங்கு பேய் வேடம் அணிந்திருந்த சிறுவன் ஒருவரை தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

சம்பவத்தில் களுத்துறை வடக்கு , பெல்பொல பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவனே காயமடைந்துள்ளார். பொசன் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு சிறுவர்களால் வடிவமைக்கப்பட்ட பேய் வீட்டிற்கு பார்வையாளர்களாக சந்தேக நபர்கள் சென்றுள்ளனர்.

பேய் வீட்டில் சிறுவன் மீது தாக்குதல் | Attack On Boy In Haunted House Kalutara

இதன்போது, காயமடைந்த சிறுவன் பேய் வேடம் அணிந்து இவர்களைப் பயமுறுத்தியதனால் , கோபமடைந்த மூவரும் சிறுவனை தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த சிறுவன் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.