கனடாவில் வீடொன்றில் இருந்து நால்வர் சடலங்களாக மீட்பு

கனடாவில் வீடொன்றில் இருந்து நால்வர் சடலங்களாக மீட்பு

கனடாவின்(Canada) ஒன்றாரியோ மாகாணத்தின் நகரமொன்றில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவமானது ஒன்றாரியோவின் ஹரோவ் பகுதியில்  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கற்பனை செய்து பார்க்க முடியாத துயரச் சம்பவம் என பொலிஸார் இந்த சம்பவத்தை விபரித்துள்ளனர்.

மேலும், இந்த மரணங்கள் சந்தேகத்திற்கிடமையானவையா அல்லது விபத்தா என்பது பற்றிய விபரங்கள் வெளியாகாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கனடாவில் வீடொன்றில் இருந்து நால்வர் சடலங்களாக மீட்பு | Four Bodies Recovered From A House In Canada

இந்த சம்பவத்தினால் பொதுமக்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.