நாடு முழுவதும் பலத்த மழைக்கான சாத்தியம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாடு முழுவதும் பலத்த மழைக்கான சாத்தியம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21.06.2024) பிற்பகல் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் மாத்தளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பலத்த மழைக்கான சாத்தியம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Today Weather Alert Srilanka North Weatherமற்றும் மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளில், மற்றும் வடக்கில். வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணிக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.