வரியில்லா வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்
இலங்கைக்கு (Sri Lanka) வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் போது, தொழில் வல்லுநர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகையை இரத்துச் செய்வது குறித்து ஆராயப்பட்டு வருவதாக நிதியமைச்சின் (Ministry Finance) தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பரிந்துரைகளுக்கு அமைவாக வாகன இறக்குமதி மீதான தடையை நீக்குவது குறித்து தற்போது அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
இதற்காக விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் வாகன இறக்குமதித் தடை முழுமையாக நீக்கப்படுமாக இருந்தால், தொழில் வல்லுநர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகையுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு இடைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை சாதாரணமாக வாகன இறக்குமதிக்கு 200 சதவீதம் வரையான வரியை ஏனைய தரப்பினர் செலுத்துகின்றனர்.
இந்த நிலையில் தொழில் வல்லுநர்கள் வரியின்றி வாகனம் ஒன்றை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.