மைத்திரி பதிவு செய்துள்ள மோசமான வரலாற்று சாதனை

மைத்திரி பதிவு செய்துள்ள மோசமான வரலாற்று சாதனை

முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன(Maithiripala Sirisena) 103 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க வேண்டியுள்ளதாக பிபிசி வானொலி தெரிவித்துள்ளது.

மக்களின் மனித உரிமைகளை மீறியமைக்காகவே, இந்த நட்டஈடு என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மனித உரிமைகளை மீறியதற்காக அதிக முறை தண்டிக்கப்பட்ட ஒரே அதிபர் என்ற சாதனையை மைத்திரிபால சிறிசேன படைத்துள்ளார்.

இதுபோன்ற 2 வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட அவருக்கு103 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில், சட்டவிரோதமாக நாடாளுமன்றத்தை கலைத்த வழக்கு, ஈஸ்டர் தாக்குதல் வழக்கு மற்றும் ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு மன்னிப்பு வழங்கிய வழக்கு ஆகிய மூன்று வழக்குகளில் இரண்டில் இந்த இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.