பாலத்தில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் பலி!
இரத்தினபுரி, கிரியெல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.