மக்களே அவதானம்; அடுத்த 36 மணி நேரத்திற்கு எச்சரிக்கை!

மக்களே அவதானம்; அடுத்த 36 மணி நேரத்திற்கு எச்சரிக்கை!

அடுத்த 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (1) மாலை திணைக்களம் வௌியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே அவதானம்; அடுத்த 36 மணி நேரத்திற்கு எச்சரிக்கை! | Attention People Warning For The Next 36 Hours

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.