வாகன இறக்குமதிக்கான அனுமதி குறித்து எழுந்துள்ள சந்தேகம்
நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பதாக அரசாங்கம் அடிக்கடி கூறுவது தொடர்பில் சந்தேகம் எழுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், வாகனங்களின் இறக்குமதிக்கு அனுமதி கிடைத்தவுடன் விலைகள் உயரும் நிலை காணப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”வாகன இறக்குமதி தொடர்பில் 4 வருடங்களாக காத்திருக்கின்றோம். விரைவில் கொண்டுவருவதாக கூறுகின்றார்கள்.
ஆனால் திகதி நேரத்தை கூறவில்லை. அத்துடன் இதுவரை ஏற்றுமதி செய்யப்படவில்லை.
நாங்கள் வாகனங்களை இறக்குமதி செய்யும்போது, அரசாங்கம் 200% வரி விதிக்கிறது. என பிரசாத் மானேகே மேலும் தெரிவித்துள்ளார்.