கொழும்பில் பயங்கர விபத்து... வீதியில் பயணித்த பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த நிலை!

கொழும்பில் பயங்கர விபத்து... வீதியில் பயணித்த பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த நிலை!

கஹதுடுவ வெத்தர வைத்தியசாலைக்கு முன்பாக பயணித்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் மீதும் வீதியில் பயணித்த மாணவர் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பயங்கர விபத்து... வீதியில் பயணித்த பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த நிலை! | Kahathuduwa Student Injured In Car Accident

ஸ்கூட்டருடன் கார் சிறிது தூரம் முன்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டு மின்கம்பத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவன் வெத்தர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பில் பயங்கர விபத்து... வீதியில் பயணித்த பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த நிலை! | Kahathuduwa Student Injured In Car Accident

பிலியந்தலை திசையிலிருந்து கஹத்துடுவ திசை நோக்கிச் சென்ற காரின் வலதுபக்கப் பின்பக்க டயரில் காற்று இறங்கியதால் சாரதிக்கு காரைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

விபத்து தொடர்பில் 29 வயதான காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.