முதலாம் தரத்தில் இணைத்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி

முதலாம் தரத்தில் இணைத்துகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி

முதலாம் தரத்தில் இணைத்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கச் சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய குறித்த எண்ணிக்கை 35 – 40 வரை அதிகரிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொதுத் தேர்தலின் பின்னர் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொள்ளும் அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.