க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு குறித்து வெளியான தகவல்

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு குறித்து வெளியான தகவல்

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இவ்வார இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக  இலங்கை பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது.

குறித்த பரீட்சையில் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு குறித்து வெளியான தகவல் | Gce Al Results In Sri Lanka

அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சார்த்திகளும், 65,531 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.