
நாடளாவிய ரீதியில் மூடப்படவுள்ள மதுபானசாலைகள்: வெளியான தகவல்
வெசாக் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், குறித்த தீர்மானத்தை இலங்கை கலால் திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வெசாக் மற்றும் பௌர்ணமி தினமான 23 முதல் 24 வரையான திகதிகளில் இந்த மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மாத்தளை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச அனுமதிப் பத்திரம் பெற்ற மதுபானசாலைகளையும் மூடுவதற்கு இலங்கை கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.