மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
பசறை - லுணுகலை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (19.05.2024) காலை இடம்பெற்றுள்ளது.
வழிபாட்டுத்தலமொன்றில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போதே மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் லுணுகலை - கீனகொட பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக லுணுகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
அர்ஜுனின் ‘பிளாஸ்ட்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
26 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026