அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அண்மைய நாட்களில் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை கடந்த வாரம் 303 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் நேற்று (17.05.2024) 307 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் நேற்று யூரோ ஒன்றின் பெறுமதி 335 ரூபாவாகவும் ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் பெறுமதி 390 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இந்த நாட்களில் ரூபாவின் பெறுமதி மிகவும் குறைவாகவே வீழ்ச்சியடைந்து வருவதாக மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.