தொடரும் வேலைநிறுத்தங்கள்: பல்கலைக்கழக மாணவர்களின் தற்போதைய நிலை
இந்த நாட்களில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பல்கலைக்கழக விரிவுரைகள் இணையத்தளத்தில் நடத்தப்படுகின்றன.
குறித்த விடயத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, இந்த வேலை நிறுத்தம் காரணமாக அனைத்து பரீட்சை நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க (Sampath Amarathunga) தெரிவித்துள்ளார்.
அதன்படி, சுமார் 150,000 மாணவர்களின் பட்டப்படிப்பு தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் தலைவர் சுசில் சோமரத்ன வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார்.