வவுனியா இரட்டை கொலை சம்பவம்... சாட்சியாளருக்கு பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல்

வவுனியா இரட்டை கொலை சம்பவம்... சாட்சியாளருக்கு பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல்

வவுனியாவில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருடன் தொடர்பில் இருக்கும் பெண் கிராம அலுவலரால் சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றால் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன், மனைவி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

வவுனியா இரட்டை கொலை சம்பவம்... சாட்சியாளருக்கு பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் | Vavuniya Double Murder Witness Threated Female Vao

குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் சிஐடியின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீட்டு உரிமையாளரான சுரேஸ் மன்றில் ஆஜராகி சாட்சியமளித்திருந்தார்.

வவுனியா இரட்டை கொலை சம்பவம்... சாட்சியாளருக்கு பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் | Vavuniya Double Murder Witness Threated Female Vao

குறித்த சாட்சியத்தில் தனது வீட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று தற்போது கல்வி கற்று வரும் தனது மகள் இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை அடையாளம் காட்டியிருந்தார்.

இதன் பின்னர் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபருடன் தொடர்புடைய பெண் கிராம அலுவலர் எனது மகள் கல்வி கற்க செல்கின்ற போது அங்கு நின்று மகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். நான் குறித்த இடத்திற்குச் சென்றதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.

வவுனியா இரட்டை கொலை சம்பவம்... சாட்சியாளருக்கு பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் | Vavuniya Double Murder Witness Threated Female Vao

குறித்த பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்,

குறித்த பெண் கிராம அலுவலர் சம்பவத்தின் போது மரணமடைந்த சுகந்தன் அவர்களுடன் முன்னர் இணைந்து வாழ்ந்து வந்ததாகவும், அதன் பின் சுகந்தனின் நண்பரும் பிரதான சந்தேக நபருமாகிய தடுப்பில் உள்ள நபர் குறித்த கிராம அலுவலரை காதலித்து தான் அழைத்து சென்று வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்ததுடன், அதனால் ஏற்பட்ட முரண்பாடு இக் கொலைக்கு காரணம் என சாட்சியமளித்திருந்ததாக தெரிவித்தார்.

வவுனியா இரட்டை கொலை சம்பவம்... சாட்சியாளருக்கு பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் | Vavuniya Double Murder Witness Threated Female Vao

இவ் வழக்கு அடுத்த தவணைக்காக ஜூன் மாதம் 7 ஆம் மன்றினால் திகதியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களுக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.