முன்பள்ளிச் சிறுமிக்கு எமனான கைபேசி
இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையடக்க தொலைபேசியே உலகம் என்று கிடக்கின்றனர்.
கையடக்க தொலைபேசியை கையில் வைத்து நோண்டிக்கொண்டிருந்தால் போதும் என்ற நிலை அவர்களுக்கு. இதுவும் ஒரு போதைதான் என தெரிவிக்கின்றனர் கல்வியாளர்கள்.
அந்த வகையில் முன்பள்ளிச் சிறுமி ஒருவர் கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்யச் சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மகொன முங்கென பிரதேசத்தில் வசிக்கும் ஐந்து வயதுடைய முன்பள்ளிச் சிறுமியே உயிரிழந்தவராவார்.
சடலம் பேருவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயாகல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
