கிணற்றில் விழுந்து 4 வயது குழந்தை பரிதாப உயிரிழப்பு
பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நேற்று (11.4.2024) மெதகம (Medhakama,) - ஈரியகஹமட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
வீட்டுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஈரியகஹமட - கெதவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 4 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026