மூன்று நாட்கள் மூடப்படவுள்ள மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகள்
2024ஆம் ஆண்டிற்கான அரச வெசாக் விழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை அரச வெசாக் விழாவை மாத்தளை(Matale) மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முன்னேற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
இதன்படி மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,மே 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் மதுபான நிலையங்கள் மூடப்படுமெனவும் இறைச்சி விற்பனை செய்யும் இடங்களும் குறித்த நாட்களில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.