பல்கலைக்கழக தொழில் சங்க தலைவர்களிடையே இடம்பெறவுள்ள கலந்துரையாடல்

பல்கலைக்கழக தொழில் சங்க தலைவர்களிடையே இடம்பெறவுள்ள கலந்துரையாடல்

பல்கலைக்கழக தொழிற்சங்க தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்தார்.

சம்பளக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் 8ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது.