விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : இன்று முதல் வங்கிகளுக்கு வருகிறது பணம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : இன்று முதல் வங்கிகளுக்கு வருகிறது பணம்

நெற்செய்கைக்கான பூந்தி உரம் அல்லது மியூரேட் ஒப் பொட்டாஷ் (MOP) கொள்வனவுக்கான பணம் இன்று (7) முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு ஹெக்டேருக்கு 15000 ரூபாய் வீதம் பணம் வரவு வைக்கப்படவுள்ளது.

கடந்த சில பருவங்களில் நெல் சாகுபடிக்கு பூந்தி உரமிடுதல் அளவு குறைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நெற்பயிர்களை வலுப்படுத்துவதற்கும், நெல் விதைகளை முழுமையாக்குவதற்கும் எம்ஓபி உரத்தைப் பயன்படுத்துவது கட்டாயம் என்று விவசாயத் திணைக்களம் குறிப்பிடுகிறது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : இன்று முதல் வங்கிகளுக்கு வருகிறது பணம் | Money To Buy Bundy From Tomorrowஅதிக பருவத்தில் எம்ஓபி உரம் 30,000 மெட்ரிக் தொன் தேவை என்றாலும், அதில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே விவசாயிகள் கொள்முதல் செய்துள்ளனர்.

குறிப்பாக நெற்செய்கையை முடித்துள்ள விவசாயிகளுக்கு இந்த நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்தார்.