ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காத உயிரினம் எது தெரியுமா..

ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காத உயிரினம் எது தெரியுமா..

தண்ணீர் இல்லாமல் எந்த ஒரு உயிரினமும் உயிர்வாழ முடியாது என்பது பலருக்கு தெரிந்த ஒன்று. விலங்குகள் தொடங்கி மனிதர்கள் வரை அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் பிரதானமாக உள்ளது.

ஆனால் தன் வாழ்நாள் முழுதும் தண்ணீர் குடிக்காத விலங்கு ஒன்று உள்ளது. அதுதான் கங்காரு எலி. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இந்த வகையான எலிகள், தன் வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதில்லை. கங்காரு எலிகள் பாலைவனங்களில் வாழ்கின்றன.

அவற்றின் செரிமான அமைப்பு சரியாக செயல்பட தண்ணீர் தேவையில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காத உயிரினம் எது தெரியுமா? | Do You Know Which Animal Does Not Drink Even Waterஇந்த வகை எலிகள் மிக வேகமாக ஓடும் திறன் கொண்டவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு கங்காரு எலி ஒரு நொடியில் சுமார் 6 மீட்டர் தூரம் வரை ஓடக்கூடியதாம்.

இந்த வகை எலிகள் நீண்ட கால்களை கொண்டிருப்பதால் இவை கங்காரு எலி என அழைக்கபடுகிறது.

இதன் மொத்த நீளம் 38 செ.மீ ஆகும். அதில் வால் மட்டும் 20 சென்றிமீற்றர் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? கங்காரு எலிகள் ஏனைய விலங்குகளை போல பழங்கள், இலைகள் மற்றும் தண்டுகளை விரும்பி சாப்பிடுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.