திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்

திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்

தேர்தல் பிரசாரத்தின் போது திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மேலதிக சிகிச்சைகளுக்காக சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

நாளை மறுதினம் (19) மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேலூர் தொகுதியில், சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். 

 

தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டார். பிரசாரத்தின் போது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மன்சூர் அலிகான் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்சூர் அலிகான், மேலதிக சிகிச்சைகளுக்காக நோயாளர்காவு வண்டி மூலம் சென்னை அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

எனினும் அவரது உடல்நிலைக் குறித்தும் அவருக்கு உடல்நிலையில் என்ன பாதிப்பு என்பது குறித்தும் அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.