இலங்கையில் பயங்கர சம்பவம்..தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்!

இலங்கையில் பயங்கர சம்பவம்..தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்!

கண்டி கலஹா, நில்லம்பை யோக லெட்சுமி தோட்டத்தில் தனது தம்பியை அண்ணன் அடித்து கொலை செய்துள்ள கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் யோகலெட்சுமி தோட்டத்தைச் சேர்ந்த 32 வயதான கிட்ணசாமி கருணாநிதி என்பவரே உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் பயங்கர சம்பவம்..தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்! | Brother Killed Younger Brother Land Problem Kandy

குறித்த நபர் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையிலேயே இன்றையதினம் (12-04-2024) காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தாக்குதல் நடத்திய அண்ணன் சில நாட்களுக்கு முன்னரே சிறைச்சாலையில் இருந்து வந்துள்ளார்.இலங்கையில் பயங்கர சம்பவம்..தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்! | Brother Killed Younger Brother Land Problem Kandy

அதன்பின்னர் அநுராதபுரம் பகுதியில் கூலி வேலை செய்துவந்த நிலையில் நேற்றையதினம் (11-04-2024) மதியம் திடீரென ஊருக்கு வந்துள்ளார்.

அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையில் காணி பிரச்சினை இருந்து வந்த நிலையில், அது தொடர்பில் நேற்றும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இரவு அது சண்மையாக மாறியுள்ளது.

இதன்போது கத்தி மற்றும் போத்தலால் தம்பியின் தலைபகுதியில் தாக்கி அண்ணன் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. தலை பகுதியில் பலத்த காயம் காணப்படுகின்றது.

இலங்கையில் பயங்கர சம்பவம்..தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்! | Brother Killed Younger Brother Land Problem Kandy

சம்பவத்தின் பின்னர் அண்ணன் தப்பிச்செல்ல முற்பட்டபோது நில்லம்பை பேருந்து நிலையத்தில் வைத்து அண்ணனை ஊர் மக்கள் மடக்கிபிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கலஹஹா பொலிஸார் மற்றும் கம்பளை இரசாயன தடயவியல் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.