டிஜிட்டல் பரிவர்த்தனையின் ஊடாக பொருளாதாரத்தை மாற்ற முடியும்
டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தை உருவாக்குவதற்கான சட்ட மூலங்கள் இந்த வருட நடுப்பகுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
துரித டிஜிட்டல் பரிவர்த்தனையின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாற்ற முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் ஆரம்பமான டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் கூறியுள்ளார்.