யாழில் சொகுசு பேருந்துடன் மோதிய மோட்டார்சைக்கிள்: ஒருவர் உயிரிழப்பு!!
யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்று இரவு (25.03.2024) இடம்பெற்றுள்ளது.
சொகுசு பேருந்தொன்று வீதியில் சென்றவேளை எதிரே வந்த மோட்டார்சைக்கிளை மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த சின்னராசா சுதன்ராஜ் (வயது 40) என்பவராவார்.
சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.