கால்வாயொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
காலி- எல்பிட்டி, மிரிஸ்வத்த பிரதேசத்தில் உள்ள கால்வாயொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது அழுகிய நிலையில் காணப்படுவதால் உயிரிழந்தவர் தொடர்பான அடையாளங்கள் இதுவரை கண்டறிப்படவில்லை என எல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த மரணமானது கொலையா , தற்கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.