இந்தியாவில் உயிரிழந்த தந்தை; மகளுக்கு ஏற்பட்ட சந்தேகம்; தோண்டி எடுக்கப்பட்ட உடலம்

இந்தியாவில் உயிரிழந்த தந்தை; மகளுக்கு ஏற்பட்ட சந்தேகம்; தோண்டி எடுக்கப்பட்ட உடலம்

 இந்தியாவில் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு வத்தளை கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் வத்தளை நீதவான் நீதிமன்ற உத்தரவில் மீள் பரிசோதனைக்காக கடந்த புதன்கிழமை (13) மீள தோண்டி எடுக்கப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு உயிரிழந்த மைக்கல் டானியேல் ஜெரோப் என்ற 67 வயதுடையவரின் சடலமே தோண்டி எடுக்கபப்ட்டுள்ளது.

இந்தியாவில் உயிரிழந்த தந்தை; மகளுக்கு ஏற்பட்ட சந்தேகம்; தோண்டி எடுக்கப்பட்ட உடலம் | Father Died In India The Daughter S Doubtsஇவர் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி அன்று இந்தியாவில் உள்ள தனது உறவினர் வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார்.

தனது தந்தையின் மரணம் தொடர்பில் சந்தேகிப்பதாக உயிரிழந்தவரது மகள் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நீதவான் இந்திக்க அதுருலிய முன்னிலையில் உயிரிழந்தவரது சடலம் மீள தோண்டி எடுக்கப்பட்டது.

மீள தோண்டி எடுக்கப்பட்ட சடலமானது மரண விசாரணைகளுக்காக ராகமை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் களனி குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.