ஸ்ரீலங்கா நாடாளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக நடந்த சம்பவம்!
வரலாற்றில் முதற்தடவையாக நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள், நடைமுறைகள் மற்றும் சம்பிரதாயங்கள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற செய்திமடல் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் பற்றிய பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய ஈ-செய்திமடலான “நாடாளுமன்ற வித்தி” நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவினால் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதி பிரதானியுமான நீல் இத்தவல மற்றும் நாடாளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.