தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழைவீழ்ச்சியும் பதிவாகும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுக்கூறியுள்ளது.
குறிப்பாக பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.