
பாகிஸ்தானோடு நட்புறவையே இந்தியா விரும்பியது – நரேந்திர மோடி
பாகிஸ்தானோடு நட்புறவையே இந்தியா விரும்பியது. ஆனால் பாகிஸ்தான் இயற்கையான குணத்தின் காரணமாக இந்தியாவை முதுகில் குத்தியது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “சமூகவலைதளங்களில் நாட்டின் நலனுக்கு எதிரான நலனுக்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம். கொரோனாவுக்கு எதிரான போர் முடியாததால் மக்கள் எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும்.
அசவுகரியமாக இருந்தாலும் கொரோனாவை தடுக்க முகக்கவசம் அணிவது அவசியம். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
முகக்கவசத்தை அகற்ற தோன்றினால் நமது மருத்துவர்கள், செவிலியர்கள் நினைத்து பாருங்கள். நம்மை காப்பாற்ற சுகாதார பணியாளர்கள் பல மணிநேரம் முக கவசம் அணிந்து பணியாற்றுகின்றனர்.
முகக் கவசம் அணிவது, 6 அடி இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது.
கார்கில் போரில் உயிர் துறந்த வீரர்களுக்கு என்னுடைய அஞ்சலி. நம் ஒவ்வொரு வார்த்தையும், செயலும் இராணுவ வீரர்களுக்கு மன உறுதியை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
கார்கில் போரில் வெற்றிக்காக இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு சமூக வலைதளங்களிலும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்