செர்ரி ஏ: ஏசி மிலான்- அட்லாண்டா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு!

செர்ரி ஏ: ஏசி மிலான்- அட்லாண்டா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவு!

செர்ரி ஏ கால்பந்து லீக் தொடரின், ஏசி மிலான்- அட்லாண்டா அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

கியூசெப் மீசா விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி இன்று (சனிக்கிழமை) இப்போட்டி நடைபெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 14ஆவது நிமிடத்தில் ஏசி மிலான் அணியின் வீரரான ஹக்கன் கால்ஹனோக்லு அடித்தார்.

இதனைத் தொடர்ந்து, போட்டியின் 34ஆவது நிமிடத்தில் அட்லாண்டா அணியின் வீரரான டுவான் ஸாபாடா ஒரு கோல் அடித்தார்.

மேற்கொண்டு இரு அணிகளால் முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

செர்ரி ஏ கால்பந்து லீக் தொடரின் புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை, ஏசி மிலான் அணி 60 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. அட்லாண்டா அணி 75 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.