வடக்கு - கிழக்கில் பலத்த மழைக்கான சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

வடக்கு - கிழக்கில் பலத்த மழைக்கான சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில். 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கில் பலத்த மழைக்கான சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை | Chance Of Heavy Rain In North East Warning

இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலின் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.