வடக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை..! பலத்தகாற்று - வெளியாகியுள்ள எச்சரிக்கை.

வடக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை..! பலத்தகாற்று - வெளியாகியுள்ள எச்சரிக்கை.

வளிமண்டல குழப்பம் காரணமாக, அடுத்த சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் தற்காலிகமாக மழையுடன் கூடிய காலநிலை உருவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் எனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பலத்த மழை பெய்யக்கூடும்.

வடக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை..! பலத்தகாற்று - வெளியாகியுள்ள எச்சரிக்கை | Weather Today Sri Lanka

கிழக்கு, ஊவா, மேற்கு சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

எனவே ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.