குறைவான விலையில் புத்தகங்கள் : பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.

குறைவான விலையில் புத்தகங்கள் : பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு குறைந்தளவு விலையில் அப்பியாச புத்தகங்களை வழங்கவுள்ளதாக அரச ஊடக பணிப்பாளர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய (13.12.2023) அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறைவான விலையில் புத்தகங்கள் : பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி | Exercise Books At Low Price For Studentsஅரசாங்க அச்சக திணைக்களத்தினாலேயே மேற்குறிப்பிட்டவாறு மானிய முறையில் புத்தகங்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் தொடர்பான விபரங்களை வழங்கி புத்தகங்களை விநியோகிப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் எனவும் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.