விபத்தில் சிக்கிய அரச வாகனம்; பயணித்தவர்களுக்கு நேர்ந்த நிலை!
சுகாதார திணைக்களத்திற்கு சொந்தமான கெப் வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்திலுள்ள பயணிகள் பஸ் நிறுத்துமிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது,
திருக்கோவில் - பொத்துவில் பிரதான வீதியில் காஞ்சிரங்குடா பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கெப் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதுடன், பயணிகள் பஸ் நிலையத்தில் எவரும் இல்லை எனவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சம்பவத்தில் எந்த விதமான உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.