மத்ரஸா மாணவனின் மரணத்திற்கான அதிர்ச்சி காரணம் வெளியானது!

மத்ரஸா மாணவனின் மரணத்திற்கான அதிர்ச்சி காரணம் வெளியானது!

மத்ரஸா பாடசாலை மாணவன் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருப்பதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

அம்பாறை பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் (07-12-2023) இடம்பெற்ற குறித்த மாணவனின் மரண விசாரணையின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மத்ரஸா மாணவனின் மரணத்திற்கான அதிர்ச்சி காரணம் வெளியானது! | Madrassa Student Cause Of Death Revealed Policeமேலும், மரணமடைந்த மாணவனின் சடலமானது சம்மாந்துறை பகுதியில் மார்க்க கடமைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் பாதுகாப்பாக அவரது சொந்த ஊரான காத்தான்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் சேனாரத்ன குறித்த மத்ரஸா பாடசாலைக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

மத்ரஸா மாணவனின் மரணத்திற்கான அதிர்ச்சி காரணம் வெளியானது! | Madrassa Student Cause Of Death Revealed Police

மேலும், மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற சந்தேகத்துடன் விசாரணை தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இதேவேளை, மாணவனின் மரண விசாரணைக்காக சாய்ந்தமருது பொலிஸாரால் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட மதரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.

மத்ரஸா மாணவனின் மரணத்திற்கான அதிர்ச்சி காரணம் வெளியானது! | Madrassa Student Cause Of Death Revealed Policeகைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நாளை (08-12-2023) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.