மிக்ஜாம் சூறாவளியின் தாக்கம் தொடர்பான அறிவித்தல்.

மிக்ஜாம் சூறாவளியின் தாக்கம் தொடர்பான அறிவித்தல்.

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த“MICHAUNG” (மிக்ஜம்) என்ற சூறாவளியானது நேற்றிரவு 11.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து 520 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு இன்று (2023.12.05) காலை 11.30 மணியளவில் வடக்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மிக்ஜாம் சூறாவளியின் தாக்கம் தொடர்பான அறிவித்தல் | Notification Regarding Impact Of Cyclone Mikjam

ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையுடன்  பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.