ஆசிரியரால் கடுமையாக தாக்கப்பட்ட மாணவனுக்கு நேர்ந்த நிலை! தாயாரின் அதிர்ச்சி தகவல்.
ஹம்பந்தோட்டை - மித்தெனிய பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனை பாடசாலை ஆசிரியர் தாக்கியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இதற்கு முன்பும் மாணவன் மீது பலமுறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.