சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதம் கடந்த வருடத்தை விட இவ்வருடம் அதிகரிப்பு!

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதம் கடந்த வருடத்தை விட இவ்வருடம் அதிகரிப்பு!

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் முக்கியமான அறிவிப்பொன்றினை விடுத்துள்ளார்.

அவ்வகையில், கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரத்திற்குத் தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் சாதகமான வளர்ச்சி காணப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதம் கடந்த வருடத்தை விட இவ்வருடம் அதிகரிப்பு! | 2022 2023 O L Examnination Result Percentage

“சித்தியடைந்தோர் வீதம் மொத்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 473,014 ஆகும். இவர்களில் 394,878 பாடசாலை ஊடாக விண்ணப்பித்தவர்கள், மற்றும் 78,136 தனியார் விண்ணப்பதாரர்கள்.

மொத்த விண்ணப்பதாரர்களில் 428,299 பேர் இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததுடன், சித்தியடைந்தோர் தொடர்பிலான 90.54% வீதமானது மிகவும் சாதகமான நிலைமையாகும்.

இந்த வருட பொதுப் பரீட்சையின் பெறுபேறுகளை மாகாண ரீதியில் பகுப்பாய்வு செய்யும் போது 4 மாகாணங்கள் முன்னிலை பெற்றுள்ளதுடன் முதலிடத்தை தென் மாகாணம் பெற்றுள்ளது. இது 77.57% வீதமாக வீதமாக காணப்படுகிறது.

இரண்டாவது இடத்தில் 75.10% வீத சித்தி நிலையுடன் சப்ரகமுவ மாகாணமும், மூன்றாவது இடத்தினை 74.92% வீதத்துடன் மேல் மாகாணமும், நான்காவது இடத்தினை 74.50% வீதத்துடன் வடமேற்கு மாகாணமும் பெற்றுள்ளன.

உயர்தர கல்வி மேலும், உயர்தர வகுப்பில் கல்வியை தொடர் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதம் கடந்த வருடத்தை விட இவ்வருடம் அதிகரிப்பு! | 2022 2023 O L Examnination Result Percentage

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த சதவீதம் படிப்படியாக அதிகரித்துள்ளது.

2014 இல் 69.02% ஆகவும், 2015 இல் 69.33% ஆகவும், 2016 இல் 69.4% ஆகவும், 2017 இல் 73.05% ஆகவும், 2018 இல் 75.09% ஆகவும், 2018 இல் 73.84% ஆகவும், 2018 இல் 73.84% ஆகவும், 2018 இல் 76.59% ஆகவும், 2015 இல் 76.59% ஆகவும், 74.59% ஆகவும் உள்ளது.

இந்நிலையில், மிகவும் துல்லியமான பெறுபேறுகளை வழங்குவதற்கு கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் இரவும் பகலும் கடுமையாக உழைத்துள்ளனர்.

மேலும், பெறுபேறுகள் வெளியாகும் வரை பரீட்சைக்கு வெற்றிகரமாக உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்." என வலியுறுத்தியுள்ளார்.