திருகோணமலையில் முதலையால் உயிரிழந்த இளைஞன்

திருகோணமலையில் முதலையால் உயிரிழந்த இளைஞன்

திருகோணமலை - சம்பூர் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக  உயிரிழந்துள்ளார்.

சம்பூர்  தொடுவான்குளம் ஆற்றில் நீராடிய இளைஞர் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் முதலையால் உயிரிழந்த இளைஞன் | Youth Was Killed By A Crocodile In Trincomalee

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.  சம்பவத்தில்திருகோணமலை - சம்பூர் பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.