வெளிநாடொன்றில் இலங்கைபெண் மர்மமான முறையில் மரணம் : கதறும் பெற்றோர்.

வெளிநாடொன்றில் இலங்கைபெண் மர்மமான முறையில் மரணம் : கதறும் பெற்றோர்.

ஓமானில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்தஇலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், உயிரிழந்த பெண்ணின் சடலம்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆனமடுவ குமாரகம பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான ஜே.ஏ.ஷிரோமி பிரதீப் ஜயக்கொடி என்ற திருமணமாகாத பெண்ணே இவ்வாறு துரதிஷ்டவசமாக தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

ஆறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பெண்ணான இவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடொன்றில் இலங்கைபெண் மர்மமான முறையில் மரணம் : கதறும் பெற்றோர் | Woman In Oman Committed Suicide

அவர் தனது தாய், தந்தையருக்கு உதவியாக வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இருப்பினும், திருமணமாகாத இந்த பெண்ணின் தாய், தந்தை மற்றும் உடன்பிறந்தவர்கள் கூறுகையில், அவர் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவரிடம் வலிமை இல்லை என தெரிவித்தனர்.

போலி வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தும் நிகவெரட்டிய கொட்டாஹெர ஹலவத்த பிரதேசத்தில் வசிக்கும் நபர் மற்றும் ஒருவர் ஊடாக சுற்றுலா வீசா பெற்றுக்கொடுத்து இந்த பெண் மோசடியான முறையில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த கொரோனா காலத்தில் இலங்கைக்கு வந்து இந்த வருடம் ஜூலை 20 ஆம் திகதி ஓமானுக்கு வேலைக்குச் சென்றதன் பின்னரே இந்த துரதிர்ஷ்டவசமான கதியை அவர் எதிர்கொண்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

வெளிநாடொன்றில் இலங்கைபெண் மர்மமான முறையில் மரணம் : கதறும் பெற்றோர் | Woman In Oman Committed Suicideதிருமணமாகாத இப்பெண்ணை போலி ஆவணம் தயாரித்து சுற்றுலா விசாவில் வீட்டு வேலையாளியாக ஓமான் நாட்டுக்கு அழைத்துச் சென்றதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஓமானில் உள்ள ஒரு வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய பெண் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், அவர் நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த அழைப்பின் பின்னர் எந்த தகவலும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

அதனையடுத்து, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இது தொடர்பில் குடும்பத்தினர் முறைப்பாடு செய்திருந்த போதிலும், அவர் சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களால் சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்றுள்ளதாகவும், தகவல்களை பெற்றுக்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .