தமிழர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் - குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

தமிழர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் - குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

திருகோணமலை வைத்தியசாலையில் இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கற்பிணித்தாயும், பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்றைய தினம் (16-11-2023) இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் - குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு! | Dead Pregnant Woman And Child Trincomalee Hospital

மூதூர் இக்பால் வீதியைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத இளம் கற்பிணித்தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இன்று மாதாந்த மகப்பேற்று பரிசோதனைக்காக திருகோணமலை தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டபோது ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்ததுள்ளார்.

இதேவேளை, வைத்தியரின் அவரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த தாய் வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டபோதிலும் வழியில் உயர் குருதி அழுத்தம் காரணமாக மயக்கம் அடைந்துள்ளார்.

தமிழர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் - குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு! | Dead Pregnant Woman And Child Trincomalee Hospital

பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டபோதிலும் குறித்த தாயும் உயிரிழந்ததுடன் ஒரு குழந்தை மட்டும் காப்பாற்றப்பட்டு விசேட சிசு பராமரிப்புப்பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கர்ப்பிணி பெண்ணின் மரணத்திற்கான முழு காரணம் இன்னும் தெரியவராத நிலையில் உயர் குருதி அழுத்தம் காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.

குறித்த தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மரணம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.