ஹோட்டலில் ஆசையாக வாங்கிய பிரியாணி; உண்ணும்போது காத்திருந்த அதிர்ச்சி!

ஹோட்டலில் ஆசையாக வாங்கிய பிரியாணி; உண்ணும்போது காத்திருந்த அதிர்ச்சி!

ஆசையாக பிரியாணி வாங்கிய அதனை வீட்டுற்கு எடுத்துசென்று சாபிட ஆவலாக திறந்த போது பிரியாணிக்குள் கோழித்தலை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஹோட்டலில் ஆசையாக வாங்கிய பிரியாணி; உண்ணும்போது காத்திருந்த அதிர்ச்சி! | Chicken Head In The Biryani Bought On A Whimஇந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்தவர் பிரதிபா.

சம்பவத்தன்று இவர் முத்தூரில் உள்ள பரோட்டா கடையில் 4 பிரியாணி பார்சல்கள் வாங்கியிருக்கிறார். பிரியாணி பார்சலை எடுத்துகொண்டு குடும்பத்துடன் சாப்பிட வீட்டுக்கு எடுத்து வந்திருக்கிறார்.

ஹோட்டலில் ஆசையாக வாங்கிய பிரியாணி; உண்ணும்போது காத்திருந்த அதிர்ச்சி! | Chicken Head In The Biryani Bought On A Whimவீட்டில் வைத்து பிரியாணி பார்சல்களை பிரித்த போது, அதில் ஒரு பார்சலில் பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்தது. அதனைப்பார்த்து பிரதிபா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

பிரியாணிக்குள் கோழி தலை கிடந்தது குறித்து திரூர் நகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதுடன் ஓட்டலுக்கு சீல் வைத்து மூடினர்.

இந்நிலையில் பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்த விவகாரத்தில் ஓட்டலை அதிகாரிகள் மூடிய சம்பவம் மலப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.